இந்திய பயணிகள் விமானத்தை போர் விமானம் என நினைத்து பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் வழிமறித்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், செப்டம்பர் 23-ந் தேதி டெல்லியில் இருந்து காபூலுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 120 பயணிகளுடன் பாகிஸ்தான் வழியாக சென்றுள்ளது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும், பாகிஸ்தான் ராணுவத்தினர் அது இந்திய விமானப்படை விமானமாக இருக்கலாம் என சந்தேகித்து, அந்த விமானத்தை வானிலேயே 2 எப்-16 போர் விமானங்களை கொண்டு இடைமறித்துள்ளது பாகிஸ்தான். பின்னர் அது பயணிகள் விமானம் என்று தெரிந்ததும் அந்த 2 பாகிஸ்தான் போர் விமானங்களும் ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்திய விமானத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளன. இந்த தகவலை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார்.