கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு சட்டப்பேரவை இன்று கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரளாவில் பேரிடர் பணிகளில், நிவாரண பணிகளில் உதவியர்களுக்கும் அக்கூட்டத்தில் பாராட்டுக்களை தெரிவித்தார் பினராயி விஜயன். ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை முதலமைச்சர் நிவாரண நிதியில் ரூ.732 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார். வெள்ளத்தால், நிலச்சரிவால் பாதிப்படைந்த கேரளாவை மறு கட்டுமானம் செய்வது குறித்தும் ஆலோசித்துள்ளனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
மேலும் மறுகட்டமைப்பு பணிகளை செய்ய ஏதுவாக ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசு கூடுதலாக 10 சதவீதம் வரி வசூல் செய்யவும் கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.