Skip to main content

பிரதமருக்கு எதிராக போராட்டம்... சோனியா தலைமையில் ஆலோசனை!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
fgh


பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. 
   

கரோனா பெருந்தொற்று பரவல், பொருளாதாரம், பெட்ரோல்-டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள கட்சித் தலைமைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கிறார் சோனியாகாந்தி. எந்த மாதிரி போராட்டம் என்பது பற்றியும், அந்த போராட்டத்தை டெல்லியில் மட்டும் நடத்துவதா? அல்லது இந்தியா முழுவதும் நடத்துவதா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என்கிறார்கள் கதர்சட்டையினர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தொடருவார் - மூத்த தலைவர்கள் உறுதி

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

jkl

 

நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூட்டத்துக்கு பிறகு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடருவார் என்று தெரிவித்தனர். 


 

Next Story

தொடர் தோல்வி எதிரொலி - டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூடியது!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

kl;

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் கூடியுள்ளது. 


 
நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் கூடியது

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உடல்நிலைக் குறைபாடு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.