காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி தற்போது விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்றிருந்தார்.அதற்கு முன்பாகராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கடந்தநாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குபொறுப்பேற்று ராகுல் காந்திபதவி விலகியதை அடுத்து சோனியா காந்தி தற்காலிக தலைவராக இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகியுள்ளார்.நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.