Skip to main content

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவிடம் உ.பி. போலீசார் விசாரணை

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா.  இவர் பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள்.   

 

கடந்த ஆண்டு செம்ப்டம்பர் மாதத்தில் டெல்லியில் நடைப்பெற்ற இந்தியா பேஷன்  மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டார்களிடம் 37 லட்சம் பெற்றுள்ளார்.    பணத்தை பெற்றுக்கொண்ட சோனாக்‌ஷி, கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வர மறுத்துள்ளார்.

 

s

 

இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.  அதையும் சோனாக்‌ஷி தர மறுக்கவே, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் காவல்நிலையத்தில் சோனாக்‌ஷி மீது புகார் அளித்தனர்.   இப்புகாரின் பேரில் சோனாக்‌ஷி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.  

 

விசாரணையின் முடிவில் சோனாக்‌ஷி கைது செய்யப்படுவதாக இருந்தது.  அந்த நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு அலகாபாத் நீதிமன்றத்தில் சோனாக்‌ஷி மனுதாக்கல் செய்தார்.  மனு மீதான விசாரணையில் சோனாக்‌ஷியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  மேலும்,  போலீசாரின் விசாரணைக்கு சோனாக்‌ஷி ஒத்துழைக்க வேண்டும் என்றும்,  விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

 

இதையடுத்து சோனாக்‌ஷியிடம் விசாரணை நடத்துவதற்காக உத்தரபிரதேச போலீசார் மும்பையில் உள்ள சோனாக்‌ஷியின் வீட்டிற்கு சென்றனர்.   அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் வெகுநேரம் காத்திருந்து திரும்பினர்.   இன்று மீண்டும்  சோனாக்‌ஷி வீட்டிற்கு விசாரணை நடத்த செல்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.