Skip to main content

‘பல நாள் கனவே.. ஒரு நாள் நனவே..’ - தாயின் ஏக்கத்தை தீர்த்த மகன்!

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

son pleasant surprise to the mother in karnataka

 

வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்களுக்கு, அங்கு கொடுக்கப்படும் வேலைகள் மட்டுமே சிரமங்களையும் வலிகளையும் தருவது கிடையாது. மாறாக அவர்கள், தங்களின் பெற்றோரையும், நண்பர்களையும், மனைவி, காதலி உள்ளிட்ட உறவுகளைப் பிரிந்து தனிமையில் வாழ்வதுதான் மிகப்பெரிய வலியாக இருக்கிறது. இவ்வாறு குடும்ப உறவுகளைப் பிரிந்து செல்பவர்கள், இரை தேடிவிட்டு கூடு திரும்பும் பறவை போல சில வருடங்களுக்குப் பிறகு வருவதுண்டு. இவ்வாறு வருபவர்களை, தாயோ, தந்தையோ, காதலியோ, மனைவியோ முதலில் பார்க்கும் போது ஏற்படும் பரவசத்தை வர்ணிக்கவே முடியாது. அதன் உள்ளே அத்தகைய அன்பும், உண்மையும், தவிப்பும், ஆனந்தமும் கலந்து இருக்கும்.

 

இப்படித்தான், இது போன்ற பாசக் காட்சியைப் பார்க்க கண்கள் இரண்டு போதாது என்று சொல்லும் அளவிற்கு, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புராவிற்கு அருகே உள்ளது கங்கொல்லி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரது மகன் ரோகித். உள்ளூரில் கிடைக்கும் வேலைகளைப் பார்த்து வந்த ரோகித்திற்கு நீண்டகாலமாக வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு நல்ல வேலையும் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் வெளிநாடு சென்று அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்த ரோகித்திற்கு, குடும்பத்தைப் பிரிந்து சென்ற சில மாதங்களிலேயே பிரிவு வாட்டியுள்ளது. ரோகித் சிறு வயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளை. ரோகித்திற்கும் அம்மா என்றால் உயிர். துபாயில் வேலை செய்யும் போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைத்தால், அம்மாவிற்கு போன் செய்து பேசுவதுதான் அவரின் முதல் வேலை. அப்படி பேசினால்தான், ரோகித்திற்கு நிம்மதியாக இருக்கும். ஆனால், இப்படியே மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகளும், ஒன்று, இரண்டு, மூன்று என நீண்டுள்ளது. இதற்கு மேல் தனது அம்மாவை பிரிந்திருக்க முடியாது என நினைத்த ரோகித், மூன்று வருடம் முடிந்ததும் தனது ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவர் வேலை செய்த நிறுவனமும் அவருக்கு விடுப்பு கொடுத்துள்ளது.

 

ஆனால் ரோகித்தோ, தான் ஊருக்கு வருவது குறித்து தாய் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தகவல் கொடுக்காமல், திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து விமானம் மூலம் ரோகித் மங்களூருவுக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அங்கிருந்து அவரின் வீட்டுக்குச் செல்லாமல், தாய் மீன் வியாபாரம் செய்கின்ற மார்க்கெட்டிற்கு நேராக சென்று திடீரென தனது அம்மாவிற்கு எதிரே நிற்கலாம் என முடிவு செய்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு துணையாக தனது நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, தாய் சுமித்ரா மீன் வியாபாரம் செய்கின்ற மார்க்கெட்டை நெருங்கியதும், தனது முகம் தெரியாதபடி கைக்குட்டையால் மூடிக்கொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு, தலையில் தொப்பியையும் மாட்டிக்கொண்டு முழுவதும் அடையாளமே தெரியாத அளவிற்கு சென்றுள்ளார். மேலும், தன்னை தனது தாய் எப்படி கண்டுபிடிக்கிறாள் என பார்ப்பதற்காக, உடன் வந்த நண்பனை தூரத்தில் நின்று வீடியோ எடுக்கும்படி கூறியிருக்கிறார்.

 

 son pleasant surprise to the mother in karnataka

 

பின்னர், சுமித்ராவிற்கு அருகே சென்று மீன் வாங்குவது போல் நின்றுள்ளார். தாய் சுமித்ராவும் கஸ்டமர்தான் யாரோ வந்திருக்கிறார் என மீன்களை எடுத்து வைத்து விலையைக் கூறியிருக்கிறார். உடனே தனக்குப் பிடித்தமான மீனை காண்பித்து விலையைக் கேட்டுள்ளார். அப்போது, அந்தக் குரலைக் கேட்ட சுமிதராவிற்கு தனது மகனின் நினைவு வந்துள்ளது. அதன் பின்னர், சற்று தடுமாற்றமான சுமித்ரா, ஒரு வேளை தனது மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த இளைஞரின் முகத்தையே பார்த்துள்ளார். கண்டே பிடிக்கமுடியாத அளவிற்கு முகத்தை மறைத்திருந்தாலும், தனது தாய் கண்டுபிடித்து விட்டாலே என நினைத்து லேசாக ரோகித் சிரித்ததும் திடீரென, அவரின் முகத்தில் இருந்த கைக்குட்டையை நீக்கியுள்ளார் சுமித்ரா. கைக்குட்டையை நீக்கியவருக்கு இன்ப அதிர்ச்சி. பொசுக்கென கண்களில் திரண்டு வந்தக் கண்ணீரோடு மூன்று ஆண்டுகளாக பிரிந்திருந்த தனது மகனை ஆரத்தழுவிக்கொண்டு முத்தமிட்டுள்ளார். மகனும் தாயின் பாச அணைப்பில் தழுதழுத்துள்ளார்.

 

இதற்கிடையே, இந்தத் தாயின் பாசக்காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்த ரோகித்தின் நண்பர், தாய் பாசத்திற்கு இணை எதுவுமே இல்லை என கூறி இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும், அம்மாவின் அன்பிற்கு மேல் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என கருத்து தெரிவித்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

 

- அருள்

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.