Son incident mother in Madhya Pradesh

மத்தியப்பிரதேசம் மாநிலம்ரத்லம்மாவட்டம்சரவன்கிராமத்தைச் சேர்ந்தவர் மாலியாபீல்-ஜீவாபாய்தம்பதியினர். இவர்களுக்குஆஷாராம்(30) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு அருந்துவதுதொடர்பாகத்தாய்ஜீவாபாய்க்கும்,ஆஷாராமுக்கும்இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் எல்லையைமீறிச்சென்ற நிலையில் தந்தை மாலியாபீல்தலையிட்டு பிரச்சனையைக் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்தஆஷாராம்கோபித்துக்கொண்டுவீட்டிலிருந்துவெளியே சென்றார்.

இதனைத் தொடர்ந்து தந்தை மாலியாபீல்தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டிற்கு வந்தஆஷாராம்தூங்கிக்கொண்டிருந்தஜீவாபாயைகற்கள் மற்றும் கட்டை கொண்டு தாக்கியுள்ளார். இதில் சம்பவஇடத்திலேயேஜீவாபாய்உயிரிழந்தார். மேலும் இதனை யாரும் கண்டுபிடிக்காதவாறு வீட்டின் வாசலில் உள்ள மரத்தில்ஜீவாபாய்தற்கொலை செய்துகொண்டது போலசோடிக்கத்தாயின் உடலை மரத்தில் தொங்கவிடமுயற்சித்துள்ளார்.

Advertisment

இது குறித்துபோலீசாருக்குமாலியாபீல்தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார்ஜீவாபாயின்உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்துவழக்குப்பதிவு செய்தபோலீசார்தப்பி ஓடியஆஷாராமைதேடி வருகின்றனர்.