Advertisment

பணத்திற்காக அப்பா இறந்ததையே மறைத்த மகன்! - 37 வருட கூத்து!!

தனது அப்பாவின் பென்சன் பணத்திற்காக அவர் இறந்ததையே கடந்த 37 ஆண்டுகளாக அவரது மகன் மறைத்து வந்துள்ளார்.

Advertisment

உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் யூ.கே.சர்க்கார். இவரது அப்பா கே.கே.சர்க்கார் வனத்துறையில் பணிபுரிந்து 1955ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றார். 1965ஆம் ஆண்டு முதல் கான்வெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் பென்சன் கணக்கைத் தொடங்கியுள்ளார். அவர் இறந்தபின்னும், இந்தத் தகவலை வங்கிக்கு தெரியப்படுத்தாமல் பென்சன் பணத்தை வாங்கி வந்துள்ளார் அவரது மகன் யூ.கே.சர்க்கார்.

pension

சமீபத்தில் வருமான வரித்துறையின் அறிவுரைப்படி, எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் நூறு வயதுக்கும் மேற்பட்ட பென்சன்தாரர்களை வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, யூ.கே.சர்க்காரின் வீட்டில் இருந்த அவரது மகன் தனது தாத்தா 1981ஆம் ஆண்டே இறந்தவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

உடனடியாக இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், யூ.கே.சர்க்கார் தனது அப்பாவின் பெயரில் வந்த பென்சன் பணத்தை கடந்த 37 ஆண்டுகளாக அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது. பென்சன்தாரர்களுக்கான வருடாந்திர ஆய்விற்காக போலி ஆவணங்களையும் யூ.கே.சர்க்கார் தயார் செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, யூ.கே.சர்க்காரின் அம்மா பெயரில் அதே வங்கிகளில் நான்குவிதமான கடன்களை வாங்கி, அதற்கு தன் மனைவியைப் பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

pension
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe