Skip to main content

தாய்க்கு தொந்தரவு கொடுத்தவரின் தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்த மகன்

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
Son cut his head



கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் பெண் ஒருவருக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தி வந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் மகன், அந்த இளைஞரின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் வந்து சரண் அடைந்தார். 
 

கொல்லப்பட்டவரின் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது என்றும், இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததா? அல்லது நட்பு ரீதியாக பழகி வந்து பின்னர் பிரச்சனை ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

தொந்தரவு கொடுத்த இளைஞரின் தலையை வெட்டி கையில் எடுத்து வந்த சம்பவம் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்போனில் டார்ச்சர்: இலை வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண்

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

செல்போனில் அடிக்கடி தொந்தரவு கொடுத்த இலை வியாபாரியை பெண் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தமபாளையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Dealer


உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆலமரத் தெருவில் குடியிருப்பவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (38). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இலை வியாபாரம் செய்கிறார். இவரது மைத்துனர் எம்.பெருமாள்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30). இவரது மனைவி நிரஞ்சனா (25). இவர்களுக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 


 

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆனைமலையன்பட்டி என்ற ஊரில் மணிகண்டனும், பாண்டீஸ்வரனும் சேர்ந்து டீ கடை நடத்தி உள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் மனைவி நிரஞ்சனாவின் மீது மணிகண்டனுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. கணவர் இல்லாத நேரங்களில் நிரஞ்சனாவை பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். 
 

இது நிரஞ்சனாவிற்கு பிடிக்கவில்லை. பலமுறை கணவருக்கு தெரியாமல் கண்டித்துள்ளார். டார்ச்சர் அதிகமாகவே கணவர் பாண்டீஸ்வரனிடம் கூறி உள்ளார். இதனையடுத்து அப்போது ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில்தான் டீக்கடையை காலி செய்து விட்டு, ராயப்பன்பட்டிக்கு மணிகண்டன சென்று இலை வியாபாரம் செய்கிறார். பாண்டீஸ்வரனும், தனது மனைவி நிரஞ்சனாவுடன் பெருமாள் பட்டிக்கு சென்று குடியேறி விட்டார். 


 

 

ஆனாலும் மோகம் விடவில்லை. மணிகண்டன், தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு நிரஞ்சனாவிற்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிரஞ்சனாவும், கணவர் பாண்டீஸ்வரனும் பைக் ஒன்றில் மணிகண்டனை கண்டிப்பதற்காக ராயப்பன்பட்டி வந்துள்ளனர். மணிகண்டனிடம் எதற்காக இப்படி செய்கிறாய் என தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் நிரஞ்சனா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி உள்ளார். பாண்டீஸ்வரனும் வெட்டியதாக கூறப்படுகிறது. சராமரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சரிந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை தூக்கி கொண்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார். 


இந்த சம்பவம் நடந்தவுடன் கணவனும், மனைவியும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Next Story

ஆண்டாண்டு காலமாக குடியிருப்போரை தொந்தரவு செய்வதா ? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் 

Published on 18/03/2018 | Edited on 18/03/2018
mariyal

 

ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் பொதுமக்களை தொந்தரவு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்டது நாட்டாணிக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு தஞ்சை மன்னர்கள் மானியமாக அளித்ததாக கூறப்படுகிறது. 

 

அவர்கள் வழிவந்தவர்கள்  சவுரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ராமானுஜன், சீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். மன்னர் காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட சுமார் 170 ஏக்கர் நிலங்கள் நாட்டாணிக்கோட்டை வடக்கு, தெற்கு, கழனிவாசல், முடப்புளிக்காடு, நீலகண்டபுரம் என பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது. 

 

கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த செண்பகத்தம்மாள் மற்றும் அவரது இளைய மகன் சீனிவாசன் ஆகியோர் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மூத்த மகன் ராமானுஜனும் சிலரிடம் கிரயம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ராமானுஜன், சீனிவாசன் சகோதரர்கள் இடையே சொத்துப்பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, ராமானுஜனுக்கு நீதிமன்றம் 70 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமானுஜன் மற்றும் அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு மற்றும் நீதிமன்ற ஆணையர்கள்  பழனிவேலு, ஜெயகுமார் ஆகியோர் சனிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் அளவீடு செய்ய வந்துள்ளனர்.

இதையடுத்து பல ஆண்டுகளாக தாங்கள் கிரையம் பெற்று குடியிருந்து வரும் இடம் பறிபோகுமோ என அச்சப்பட்ட, 500 பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீதிமன்ற ஆணையர்களிடம் கண்ணீருடன் முறையிட்டனர். இதையடுத்து திகைத்துப்போன நீதிமன்ற ஆணையர்கள், " அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி, காவல்துறைக்கு தகவல் அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். பின்னர் இராமனுஜன், அவரது வழக்கறிஞர் கோவிந்தராசு ஆகியோரிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 

 

இதையடுத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்திற்கும் சென்று முறையிட்டனர். பொதுமக்கள் சார்பாக ராஜேந்திரன் என்பவர் இராமானுஜன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் மனு ரசீது அளித்த காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை எனக்கூறி மாலை 5 மணி வாக்கில், கிராம தலைவர்கள் வீராசாமி,  சுந்தர்ராசு, நீலகண்டன் ஆகியோர் தலைமையில், பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் காவல்நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  சாலைமறியல் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

 

இந்நிலையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் 8 பேர் மீது அரசு அதிகாரிகளை ஆபாசமாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்தது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதையடுத்து ஞாயிறு அன்று கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து முறையிடுவதற்காக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றனர்.

 

இச்சம்பவம் காரணமாக இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்த நடந்து வரும் முநற்சியால் அப்பாவி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தங்களுக்கு உரிய தீர்ப்பை வழங்குவார் என நம்பிக்கையுடன் உள்ளனர்.