Skip to main content

மோடி என்ன செய்தாலும் கலாய்க்கும் இணையவாசிகள்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

மோடி டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸுடன் வரப் போகிறார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது என்று செம விளம்பரம் செய்தார்கள். அவர்களுக்கு போட்டியாக சமூக வலைதளங்களில் மோடியும் பியர் கிரில்ஸுமாக நடித்து யூ ட்யூப் சேனலில் முன்கூட்டியே இணையவாசிகள் ஒளிபரப்பி விட்டார்கள்.
 

bear grylls

 

 

உண்மையில் இந்த சூட்டிங் 2019 மக்களவைத் தேர்தலுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால், அவர் சூட்டிங்கில் இருக்கும் சமயத்திலேயே புல்வாமா தாக்குதல் நிகழ்ந்து முடிந்தது. அதுவே தேர்தல் பிரச்சாரத்துக்கு போதும் என்று நினைத்ததால் இந்த டிஸ்கவரி சேனல் படத்தை பிறகு ஒளிபரப்பலாம் என்று இருப்பில் வைத்திருந்தார்கள்.
 

அதன்படி, ஆகஸ்ட் 15 விடுதலை தினம் நெருங்கும் நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு டிஸ்கவரி சேனலில் மோடி நடித்த அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
 

இதில் நடிக்கும்போது, பதற்றமாக உணர்கிறீர்களா என்று மோடியிடம் பியர் கிரில்ஸ் கேட்டாராம்... அதற்கு, “என் வாழ்க்கையில் பதற்றத்தை உணர்ந்ததே இல்லை” என்று மோடி சொன்னாராம்...
 

அவரு எதுக்குங்க பதற்றப்படப் போறார். பாதுகாப்புக் குழுவினர் அத்தனை பேர், சூட்டிங் குழுவினர் அத்தனை பேர் இருக்கும்போது பயப்படுறதுக்கு அவரு என்ன சின்னக் குழந்தையா? அதுவும்போக, அவருக்கு எப்பவுமே இந்திய மக்களை பதற்றத்தில் வைத்திருப்பதுதான் பழக்கம்... புல்வாமா தாக்குதலுக்கு பிளான் பண்ணிக் கொடுத்துட்டு, அதுல 45 பேர் செத்துப்போய், நாடே பதற்றத்தில் இருந்தபோதும், மோடி சூட்டிங்கில் இருக்கிறார் என்றால், அதுவே அவருடைய துணிச்சலுக்கு சரியான உதாரணம் என்று பியர் கிரில்ஸுக்கு தெரிந்திருக்க வேண்டாமா? என்று சமூக வலைத்தளங்களில் கேட்டிருக்கிறார்கள்.
 

அப்புறம் ஒரு கேள்விக்கு, தனது பிரதமர் பதவிக்காலத்தில் எடுத்த முதல் லீவ் இதுதான் என்று சொல்லியிருக்கிறார் மோடி. ஆமாம் நாட்டில் இருக்கும்போது பிரதமரா நடிச்சிட்டிருந்தார். பியர் கிரில்ஸுடன் சினிமா சூட்டிங்கில் நடிக்கிறார். இதுல லீவ் ஒன்னுதான் குறைச்சல் என்றும் நெட்டிஸன்கள் கலாய்த்திருக்கிறார்கள்.
 

மோடியுடன் பியர் கிரில்ஸ் ஷெல்பி எடுக்கும் போட்டோ ஒன்று வெளியானது. காட்டில் ஷெல்பி எடுப்பதைக்கூட சூட்டிங் குழுவினர் தனியாக போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மோடியின் கேமரா மோகம் தெரிந்திருக்கிறது என்று உச்சபட்சமாக மோடியை கிண்டல் செய்திருக்கிறார்கள்.
 

மோடி தன்னை ஒரு சாகசக்காரராக காட்டிக்கொள்ள எத்தனை ஆர்வமாக நடிக்கிறாரோ, எவ்வளவு முயற்சிகளை செய்கிறாரோ, அந்த அளவு நல்ல பிரதமராக செயல்பட்டு, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும். மக்கள் அனைவரும் அவரவர் அடையாளங்களோடு அவரவருக்கு பிடித்த மொழியைப் பேசி, உடையை உடுத்தி, உணவை உண்டு வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டி.வி முன் மோடி தோன்றினாலே மக்கள் அலறியதுதான் சாதனை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Chief Minister M.K.Stalin says When Modi appeared in front of the TV, people screamed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார். 

கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர் தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது” எனக் கூறி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராக தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும், தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது! அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா? என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.