ADVERTISEMENT

தனிமனித இடைவெளியுடன் இளைஞர் உருவாக்கிய மோட்டார் சைக்கிள்... வைரலாகும் புகைப்படம்!

06:50 PM May 01, 2020 | suthakar@nakkh…



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இந்த காலகட்டத்தில் சமூக இடைவெளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் உருவாக்கிய இருசக்கர வாகனம் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது. திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாகா. இவர் டிவி பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் வீட்டில் இருந்துவந்த அவர், இந்த ஊரடங்கு காலத்தை ஏதாவது உபயோகமாக பயன்படுத்தலாம் என்று திட்டம் தீட்டினார். அதன் ஒருபகுதியாக தனிமனித இடைவெளியுடன் இருசக்கர வாகனம் ஒன்றை தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதற்காக பழைய இரும்புக்கடைக்கு சென்று மோட்டார் உள்ளிட்ட சில பொருட்களை வாங்கிய அவர், தன்னிடம் இருந்த பொருட்களை கொண்டு இருசக்கர வாகனம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். இதை தன்னுடைய மகள் பயன்படுத்துவதற்கு கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT