Skip to main content

12 வயது சிறுமி...30 பேர் செய்த கொடுமை...கைதான தந்தை...அதிர்ச்சி சம்பவம்! 

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

சொந்த மகளை தாய்க்கு தெரியாமல் தந்தையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 12வயது சிறுமி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மலப்புரம் பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நன்றாக படிக்கும் மாணவி அடிக்கடி பள்ளிக்கு வராமல் லீவு எடுத்துள்ளார். அதே போல் பள்ளிக்கு வரும் போது மிகவும் சோர்வாகவும், யாரிடமும் பேசாமல் மிகவும் தனிமையில் சோகத்துடன் இருந்துள்ளார். இந்த சிறுமியின் நடவடிக்கையை கவனித்த ஒரு ஆசிரியை நந்தினியை கூப்பிட்டு தனியாக ஆலோசனை வழங்கியுள்ளார். அப்போது நந்தினி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 

incident



அந்த ஆசிரியைடம் நந்தினி கூறிய தகவலால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயுள்ளார். ஆசிரையிடம் நந்தினி என்ற சிறுமி கூறும்போது என்னை இரண்டு வருடங்களாக 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் என்னுடைய தந்தையின் நண்பர்களும் வருவார்கள். அப்போது இவர்கள் சொல்லும் படி நடந்து கொள் என்று என் தந்தை என்னை மிரட்டுவார். எனக்கு வேறுவழி தெரியாமல் பயத்தில் என் தந்தை சொன்னதை செய்வேன். எனது தந்தை உட்பட அவரது நண்பர்கள் மேலும் சிலர் என்னை பாளையல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு என் தந்தையும் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார்.


மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் நான் வீட்டில்  இருக்கும் போது அதிக பேர் வருவார்கள். அப்போது நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்படி ஒரு சம்பவம் என்னோட வாழ்க்கையில் நடப்பது எதுவுமே என் அம்மாவுக்கு தெரியாது. என் அம்மாவிடம் சொன்னால் இரண்டு பேரையும் என் தந்தை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் இது குறித்து என் அம்மாவிடம் நான் எதுவும் கூற முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சிறுமி நந்தினி கூறியதை கேட்ட ஆசிரியை மற்றும் ஆலோசகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் இதுகுறித்து காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை உட்பட 2 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரனையில் தந்தையே பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளியது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்திற்கு பிறகு  அந்த சிறுமி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.