இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வந்தநிலையில் நேற்று 29,682பேருக்கு கரோனா உறுதியானது.
இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 26,701 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் நேற்றுமுன்தினம்17.91% ஆகக்இருந்த கரோனா உறுதியாகும் சதவீதம்,நேற்று17.54% ஆக குறைந்துள்ளது. 28,900 பேர் குணமடைந்த நிலையில் ஒரே நாளில்74 பேர் உயிரிழந்துள்ளனர்.