Skip to main content

கலவரம் குறித்து பேசினால் தேச துரோகி பட்டம் கொடுப்பார்களோ..? - சிவசேனா கடும் விமர்சனம்!

Published on 28/02/2020 | Edited on 29/02/2020

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர்.



இந்த வகையான தாக்குதல் அங்கு தொடர்ந்து வரும் சூழலில், இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 38க்கும் மேல் சென்றுள்ளது. இந்த சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம் என்று சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா தன்னுடைய சாம்னா நாளிதழில் தெரிவித்துள்ளதாவது, " தில்லி சட்டப்பேரவை தேர்தலின் போது மக்களிடம் அமித்ஷா நீண்ட நேரம் பேசினார், வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார். மக்களுக்கு நல்லது செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் தில்லியில் கலவரம் நடந்த போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. உளவுத்துறை அதிகாரி கொல்லப்படுகின்ற போது அவர் ட்ரம்பை வரவேற்று கொண்டுள்ளார், கலவரம் நடந்து முடிந்த பிறகு நடவடிக்கை எடுத்து என்ன பயன். கலவரம் குறித்து கேள்வி எழுப்பினால் தேசத்துரோதி பட்டம் கொடுத்து விடுவார்களோ?" என்று அந்த நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Manohar Joshi passed away

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.

மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

“சட்டப்பேரவைத் தலைவர் அநீதிகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” - பிரியங்கா சதுர்வேதி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 Priyanka Chaturvedi says Legislative Speaker People will give befitting response to injustices

மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டுக்கு பின் சிவசேனா பிளவுபட்டு பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். அவருடன் சென்ற 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் முறையிட்டது.

இந்த கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சிவசேனா உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் சபாநாயகருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து இன்றைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து, 'ஒரு கட்சி தலைவரின் விருப்பத்தை ஒரு கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர், 'ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனா கட்சியின் உண்மையான தலைவர். 2022 ஆம் ஆண்டு ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. ஷிண்டேவை சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவிற்கு அதிகாரம் இல்லை' என தெரிவித்தார்.

இந்த நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இன்று (11-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவு துர்திர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவர் செய்யும் அநீதிகளை மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று கூறினார்.