Skip to main content

திருவிதாங்கூர் சித்திரை திருநாள்... இஸ்ரோ தலைவர் சிவன்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

இந்தியாவின் பெரிய சமஸ்தானத்தின் ஒன்றாக இருந்த கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராட்சியின் கடைசி மன்னராக இருந்து ஆட்சி செய்தவர் ஸ்ரீ சித்திரை திருநாள் மகாராஜா. இவருடைய ஆட்சியின் போது தான் அனைத்து ஜாதியினரும் கோவில் பிரவேசம் செய்யலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவரின் நினைவாக அவர் பெயரிலான அறக்கட்டளை சார்பில் ஆண்டுத்தோறும் கலை, இலக்கியம், மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் துறைகளில் சாதனை படைப்பவர்களை பாராட்டும் விதமாக தேசிய விருது வழங்கப்படுகிறது.

sivan gets award



ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னர் 14 ஆவது தேசிய விருது இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இதற்கான சாதனையாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அறக்கட்ளையின் தலைவரும் முன்னாள் வெளிநாட்டு தூதருமான ஸ்ரீனிவாசன், முன்னாள் கேரளா அமைச்சர் சுரேந்திரன், பத்திரிக்கையாளர் எம்.ஜி ராதாகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் சதீஷ்குமார், ஸ்ரீசித்திரை திருநாள் பள்ளி முதல்வர் புஷ்பவல்லி கொண்ட குழுவினர் இஸ்ரோ தலைவர் சிவனை தேர்ந்தெடுத்தனர்.
     

இந்த தகவலை அறக்கட்டளை சார்பில் சிவனிடம் தெரிவிக்கப்பட்டது. ரூ. 3 லட்சம் பணம் மற்றும் பாராட்டு பத்திரத்துடன் விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சி காரக்கோணம் ஸ்ரீசித்திரை திருநாள் பள்ளியில் நடக்க இருக்கிறது. இந்த விருதை இந்தியா ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி வழங்குவார் என்று அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.
                             
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.