ADVERTISEMENT
ADVERTISEMENT
சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட மேக வெடிப்பால் மழை பெய்து தீர்த்தது. இதன் காரணமாக சிக்கிம் மாநிலம் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் அந்த வீரரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மற்ற வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments