Skip to main content

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடும் அதிசயம்... காரணம் என்ன..?

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

அரசியலில் பல்வேறு சாதனைகள் இந்த 70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் அரசியல்வாதிகள் படைத்துள்ளனர். அதில் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது ஜோதிபாசு தொடர்ந்து 5 முறை மேற்கு வந்க முதல்வராக பதவி வகித்தது. அந்த வகையில் 1978 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அவர் கடந்த 2000ம் வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். அந்த சாதனை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் முறியடிக்கப்படாமலேயே இருந்து வந்தது. அந்த சாதனையை சில ஆண்டுகளுக்கு முன்பு முடியறித்தவர் சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங். சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்தவர் பவன் குமார் சாம்லிங். இவரது தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, 1994ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து தேர்தல்களில் வென்று 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்தார் சாம்லிங். இந்தநிலையில் கடந்த கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வியை சந்தித்தது.


மேலும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்தபோதிலும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. 1990-ம் ஆண்டு அவர் அமைச்சராக இருந்தபோது கால்நடைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு ஒன்றில் தமாங்குக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 2018 ஆகஸ்ட் 10ம் தேதியில் இருந்து 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வராக தற்போது பதவி வகிக்கும் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதையடுத்து தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில் 1990-ம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற தமக்கு 2003-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது என அவர் வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் அவருக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை குறைத்து இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் இடைத் தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்