Skip to main content

சிக்கிம்: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; விபத்தினால் ஏற்பட்ட சோகம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Sikkim: 16 soldiers passed away; Tragedy caused by an accident

 

வடக்கு சிக்கிம் ஜமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள்  மரணம் அடைந்தனர்; விபத்தில் சிக்கிய 4 வீரர்கள் மீட்கட்டப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விபத்து நிகழ்ந்ததற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 

அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிம் வெள்ளப்பெருக்கு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

 Sikkim flood Increase in toll

 

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

 

சிக்கிம் மாநிலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி திடீரென நள்ளிரவில் மேக வெடிப்பால் பெய்து தீர்த்த மழையால், அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

 

இதனையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக 2500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1300 வீடுகளும், 13 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களில் 9 பேரின் உடல்கள் உள்ளிட்ட 32 பேரில் உடல்கள் இன்று ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பீரங்கி குண்டு; நொடியில் நேர்ந்த சோகம்

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

An instant tragedy by flood in west bengal

 

சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் மேக வெடிப்பால் பெய்து தீர்த்த மழையால், அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் முகாமில் இருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களும் தீஸ்தா ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. 

 

இதனிடையே, தீஸ்தா ஆறு, அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பாயும் நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கிலும், ராணுவ வீரர்களின் ராணுவ உபகரணங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு கரையில் ஒதுங்கியுள்ளன. 

 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆற்றின் கரையில் ஒதுங்கியுள்ள பீரங்கி குண்டை எடுத்துள்ளார். அந்த பீரங்கி குண்டை இரும்பு பொருள் என நினைத்து அதை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இரும்பு பொருள் என நினைத்து பீரங்கி குண்டை உடைத்து பழைய இரும்பு கடையில் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று எண்ணியுள்ளார். அதன்படி, அந்த பீரங்கி குண்டை தனது வீட்டில் வைத்து உடைத்துள்ளார். அப்போது, பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அவரது வீட்டில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இதனிடையே, தீஸ்தா ஆற்றின் கரையின் ஒதுங்கி இருக்கும் எந்த பொருளையும் தொட வேண்டாம் என பொதுமக்களை ஜல்பைகுரி மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீஸ்தா ஆற்றில் ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே, அவற்றை தொடாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். அறிமுகமில்லாத பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.