/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/282_8.jpg)
வடக்கு சிக்கிம் ஜமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வாகனம்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள்மரணம் அடைந்தனர்; விபத்தில் சிக்கிய4 வீரர்கள் மீட்கட்டப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்ததற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)