காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான சித்தராமையா தன்னுடன் இருக்கும் நபர் ஒருவரை பொதுவெளியில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையா தனது கட்சியினருடன் மைசூர்விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துவிட்டு அவர் திரும்பிய போது அருகில் இருந்தவர் சித்தராமையாவிடம் எதோ கூறினார். இதனால் கோபமடைந்த சித்தராமையா அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் ஒருவரை சித்தராமையா அறைந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சிதறமையாவின் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.