'மூடா மோசடி'- விசாரணை கூண்டில் சித்தராமையா

Siddaramaiah in the investigation cage

கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது மூடா மோசடி வழக்கு. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17 வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும்பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218 வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் அனுமதி வழங்கி இருக்கிறார். சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் சித்தராமையாவை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை கர்நாடக அரசு நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடகா ஆளுநர் பாஜகவின் அழுத்தத்தாலும், மத்திய அரசின் அழுத்தத்தாலும் செயல்பட்டு இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் பதில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த அனுமதி காரணமாக ஏற்படக்கூடிய நிகழ்வுகள், கர்நாடகாவில் எந்த மாதிரியான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது குறித்து சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலையில் சித்தராமையா அமைச்சரவை இது குறித்து ஆலோசிக்க கூடும் என ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

karnataka Scam Siddaramaiah
இதையும் படியுங்கள்
Subscribe