Skip to main content

ஆட்டு புழுக்கையால் வந்த சண்டை... துப்பாக்கிச்சூட்டில் முடிந்த பரிதாபம்!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

உத்தரபிரதேசம் மாநிலம் எடா மாவட்டத்தில் உள்ள ஜைத்ரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுக்வீர். இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக பல வருடங்களாக பகை இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சுக்வீருக்கு சொந்தமான ஆடு ஒன்று அவரின் பகையாளியான யோகேஷின் வீட்டுக்கு சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரின் வீட்டில் புழுக்கையை போட்டுவிட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த யோகேஷ், இதுதொடர்பாக சுக்வீரிடம் கேட்க, உடனே இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.


இதனை அடுத்து இரு வீட்டு ஆதரவாளர்களும் கம்புகளால் தாக்கிகொண்டும், துப்பாக்கியால் சுட்டும் சண்டையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். ஆடு புழுக்கை போட்டதற்காக துப்பாக்கியால் சுட்டு சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பீதியடைய வைத்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.