Shocking scene where the whole house is submerged in the river!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டோடுகிறது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. கரையோரங்களில் உள்ள மக்கள், நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், ஆற்றில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைப்புரண்டோடிய நிலையில், கரையில் இருந்த முழு வீடும் இருந்த இடம் தெரியாமல் மூழ்கிய காட்சி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில், முண்டக்காயம் என்ற நகரில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment