shocking incident in telungana

கல்லூரி மாணவி ஒருவர் ஐந்து பேரால் கொடூரமாகதாக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாக வீசி செல்லப்பட்ட சம்பவம்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கனா மாநிலம் ஹைதராபாத்தில் கல்லூரி மாணவி ஒருவர் படித்துக்கொண்டேதனியார் மருத்துவமனை ஒன்றின்மருந்தகத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று (10.02.2021) மாலை பணிமுடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட மாணவி, அவரதுதாய்க்குத் தான் புறப்பட்டுவிட்டதாகதகவல் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு வந்து சேரவில்லை.சில மணிநேரம் கழித்து, முன்பின் தெரியாத நபர்கள் தன்னை ஆட்டோவில் கடத்திச் செல்வதாக மாணவி தாயிடம்செல்ஃபோனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

Advertisment

இதனால் பதற்றமடைந்த மாணவியின்தாய், போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, போலீசார் மாணவியின்செல்ஃபோன்எண்ணைக்கொண்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். மாணவி வீட்டிற்கு செல்லஆட்டோஏறியநெடுஞ்சாலையில் இருந்து சுமார்ஒரு கிலோ மீட்டர்தொலைவில்புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் அருகேகூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு காயங்களுடன் குத்துயிரும் குலையுயிருமாக வீசப்பட்டுக் கிடந்தமாணவியைக் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

shocking incident in telungana

வீட்டிற்குசெல்ல ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோஓட்டுநர் அவரது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து மாணவியைத் தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, வன்கொடுமை செய்தநான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவானஆட்டோஓட்டுனரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Advertisment

கடந்தஆண்டு இதேபோல்தெலுங்கானாவில் தனியே சென்றஇளம்பெண்ணின்இருசக்கர வாகனம் (ஸ்கூட்டி)பழுதானநிலையில், பஞ்சர்ஒட்டஉதவுவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு இளம்பெண், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீஸ் என்கவுண்டர் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கல்லூரி மாணவிக்குநேர்ந்தஇந்த வன்கொடுமை சம்பவம் தெலுங்கானாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.