Skip to main content

பள்ளி மாணவியின் ஷூவுக்குள் 'நாகப்பாம்பு' நூலிழையில் உயிர்தப்பிய சிறுமி!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

பள்ளிக்கு செல்ல எதார்த்தமாக ஷூ அணியும்போது பள்ளி மாணவியின் ஷுவுக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பை தக்க நேரத்தில் கண்டுகொண்டதில் மாணவி அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிகழ்வு கேரளத்தில் நடந்துள்ளது.

 

shock incident in kerala...

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கரிக்ககொம்கோவில் பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பவத்தன்று ஸ்கூலுக்கு செல்வதற்காக ஷூவை எடுத்து எதார்த்தமாக காலில் அணிய முற்பட்டுள்ளார். அப்பொழுது ஷூவுக்குள் ஏதோ ஒன்று நெளிவதை போன்று உணர்ந்து உடனடியாக மாணவி ஷூவை தூக்கி வீசியுள்ளார். அப்பொழுது ஷூ உள்ளிருந்து குட்டி நாகப்பாம்பு ஒன்று வெளியே தலைகாட்டியதால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து வீட்டில் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

 

shock incident in kerala...


உடனடியாக வந்த மாணவியின் தாய் பாம்பு வெளியே போகாமலிருக்க அலுமினிய பாத்திரம் ஒன்றால் ஷூவை மூடி செங்கற்களை வைத்து மூடிவிட்டு கேரளாவில் பாம்பு பிடி நிபுணராக விளங்கும் பாபா சுரேஷ் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பிறகு அங்கு வந்த பாபா சுரேஷ் பாத்திரத்தை எடுத்து விட்டுச் ஷூவை எடுக்கையில் ஷூவில் குட்டி நாகபாம்பு பதுங்கி படுத்துக் கொண்டிருந்தது. அந்த குட்டி பாம்பை லாவகமாக பிடித்த பாபா சுரேஷ் மழைகாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என யாராக இருந்தாலும் தங்களது காலணிகளை, ஷூக்களை போடுவதற்கு முன் வெளியில் வைத்து நன்றாக கீழே தட்ட வேண்டும். உள்ளே ஏதேனும் இதுபோன்ற உயிரினங்கள், பூச்சிகள் அண்டி இருக்கின்றதா என்பதை உறுதிபடுத்திக் கொண்ட பின்னரே அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

shock incident in kerala...

 

ஸ்கூல் ஷூவுக்குள் நாகப்பாம்பு இருந்ததை சுதாரித்துக்கொண்ட பள்ளிச் சிறுமி நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.