மஹாராஷ்ராவில் நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் நடந்த பதவி பங்கீட்டு பிரச்சனையால் கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பின் நடந்த பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு பின் இன்று சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் காட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கின்றன. 1995-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்று, சிவசேனாவின் மனோகர் ஜோஷி முதல்வராக பதவியேற்றார். 1999 வரை இந்த ஆட்சி நீடித்தது. அதன்பிறகு தற்போதுதான் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.