கேரளா மாநிலம் கொச்சியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் விசைபடகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் உயிழந்தனர்.
எா்ணாகுளத்தை சோ்ந்த சிவன் என்பவருக்கு சொந்தமான ஓசியன்ட் விசைபடகில் குமரி மாவட்டம் மற்றும் கேரளா, மேற்கு வங்கத்தை சோ்ந்த 15 மீனவா்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கொச்சி முனப்பம் பகுதியில் இருந்து 35 நாட்டிங்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். விசை படகை ஏசுபாலன் என்பவா் ஒட்டினார். இதில் 6 பேர் குமரி மாவட்டம் குளச்சலை சோ்ந்த மீனவா்கள்.
இந்த மீனவா்கள் மீன் பிடித்து கொண்டிருந்த பகுதி கப்பல்கள் செல்கிற சானல் பகுதி என்பதால் அந்த அதிகாலை நேரத்தில் 10க்கு மேறப்பட்ட கப்பல்கள் ஓன்றன் பின் ஓன்றாக வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது அதில் ஓரு கப்பல் திசை மாறி மீன் பிடித்து கொண்டிருந்த அந்த விசை படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றன.
இதில் அந்த விசைபடகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவா்கள் மனக்கொடி, யாக்கோபு, யூகநாதன் ஆகிய மூன்று போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்கள் குளச்சலை சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மூன்று பேரை படுகாயத்துடன் அங்கு இன்னொரு விசைபடகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவா்கள் கரைக்கு மீட்டு வந்தனர். மற்றவா்கள் அனைவரும் படகோடு கடலில் மூழ்கியதாக கூறியுள்ளனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு சென்ற இந்திய கப்பல் படையினர் இடித்த அந்த கப்பலை தேடிவருகின்றனர். மேலும் மும்பையில் உள்ள மரைன் இன்ஸ்டியுசன் உதவியுடன் அந்த கப்பல் எந்த திசையை நோக்கி சென்றுள்ளது என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குமரி மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலி நாட்டை சோ்ந்த கப்பல் ஒன்று கொச்சியில் மீன்பிடித்து கொண்டிருந்த படகு மீது மோதியதில் குமரி மாவட்டத்தை சோ்ந்த இரண்டு மீனவா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடதக்கது.
விசைபடகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் உயிரிழப்பு!
சார்ந்த செய்திகள்
Next Story
நார்ஃபோக் கப்பலில் இறங்கிய கடற்படை; சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை
எம்.வி.லைலா நார்ஃபோக் சரக்கு கப்பல் சோமாலிய பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில், அதில் சிக்கி உள்ள 15 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், அந்த கப்பலில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனிப்பதற்காக இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் சென்னை கப்பல் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின் தொடர்ந்து சென்றுள்ளது. தற்போது ஹெலிகாப்டர் மூலமாக இந்திய கடற்படை எம்.வி.லைலா நார்ஃபோக் கப்பலை நெருங்கி விட்ட நிலையில, சரக்கு கப்பலில் இந்திய கடற்படை இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடத்தல் நடத்திய கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை கமாண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கப்பலை விட்டு சென்று விட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவேளை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் கொடுப்பதற்கு இந்திய கடற்படை தயாராக உள்ளது. அதேபோல் சரக்கு கப்பலில் உள்ள 15 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் கடற்படை உறுதி செய்துள்ளது.
Next Story
இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்; ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய அமெரிக்கா
இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
மத்திய கிழக்கின் அரேபிய கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களை தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா இதேபோன்று பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக இந்திய கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து மங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கேம் ப்ளூட்டோ என்ற அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் அந்த கப்பல் பழுதடைந்தது. இந்திய கடற்படை மற்றும் கோஸ்ட் கார்ட் கப்பல்கள் இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.