Advertisment

காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து...

பாஜக எம்.பி யாக பீகாரின் பாட்னா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்ருகன் சின்ஹா கடந்த சில மாதங்களாக பாஜக வுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் தன்னை காவலாளி என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Advertisment

shatrugan sinha tweets against bjp and modi

அதனை தொடர்ந்து பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது மோடியையும், பாஜக வையும் விமர்சித்து தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது அவரின் விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் உள்ளது. ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ உருவாக்குவோம் என்ற உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல இதுவும் காற்றோடு போய்விட்டதா? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும் நேரம் வந்து விட்டது" என கூறியுள்ளார்.

congress loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe