Skip to main content

பங்குச்சந்தையில் இன்று... எதை வாங்கலாம்? எதை விற்கலாம்?

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

SHARE MARKET SENSEX, NIFTY


இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாயன்றும் (ஜூலை 7) தொடர்ச்சியாக ஆறாம் நாளாக களைகட்டின. நிப்டி ஒரே ஒரு புள்ளியில் அதன் புதிய அடையாளத்தைத் தொடாமல் 10799.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்திருந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 187.24 புள்ளிகள் ஏற்றத்துடன் 36674.52 புள்ளிகளுடன் அமர்க்களமாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. 

 

நிப்டியில் ஏற்ற, இறக்கம்:

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் பஜாஜ் பைனான்ஸ் (7.76%), இண்டஸ் இந்த் (5.86%), பஜாஜ் பைனான்சியல் சர்வீஸ் (4.47%), ஐஷர் மோட்டார்ஸ் (3.89%), ஐசிஐசிஐ வங்கி (3.52%) ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளித்தன.

 

அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், கிராசிம், பிபிசிஎல், ஐடிசி ஆகிய பங்குகள் வீழ்ச்சி கண்டன. நிப்டியில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கித்துறை பங்குகள், ஆட்டோமொபைல், நிதிச்சேவைகள், ஐ.டி., ஊடகம் ஆகிய துறைகளின் பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டிருந்தன.

 

SHARE MARKET SENSEX, NIFTY

 

சென்செக்ஸ் நிலவரம்: 

 

தேசிய பங்குச்சந்தையில் பல ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகள் எதிர்பாராத லாபத்தை அள்ளி வழங்கின. அதன்படி மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ், ரெயின், பாஷ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பைனான்சியல், ஈக்விடாஸ், பந்தன் வங்கி, ஸ்பிக், டெரா சாப்ட்வேர் உள்ளிட்ட பல பங்குகள் சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேல் ஆதாயம் அளித்தன. சென்செக்ஸ் 30 இல் உள்ள நிறுவனங்களின் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் சற்று சரிவையும் சந்தித்தன. 

 

11,000 புள்ளிகளை நோக்கி:

 

பல ஹெவிவெயிட் கவுண்டர்களில் பங்குகளின் விலை சரியும்போது முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டு பங்குகளை வாங்கியதால் சந்தை போக்கு சாதகமான நிலையில் இருக்கிறது. நிப்டியின் குறியீடு 11000 புள்ளிகளை நோக்கி நகர்வதற்கு அதன் ஆதரவு மட்டம் 10650 புள்ளிகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், சரிவை நோக்கிச் செல்லும்பட்சத்தில் 10550 மற்றும் 10450 புள்ளிகள் வரை வர்த்தகம் நடைபெறலாம் எனக் கணித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள்.

 

''நிப்டியின் போக்கு மேலும் மேலே செல்லும்போது 10887 அளவை எட்டக்கூடும். இது கடந்த 200 நாள் வர்த்தக அளவைக் காட்டிலும் நல்ல நிலைதான். எனினும், குறியீட்டெண் ஆதரவு மட்டம் 10690 புள்ளிகளுக்குக் கீழே இறங்கினால் தேசிய பங்குச்சந்தையில் பலவீனம் உண்டாகும்,'' என்கிறார் ஹெச்டிஎப்சி செக்யூரிட்டிஸின் தீபக் ஜசானி.

 

நிப்டியின் இப்போதைய வர்த்தக நிலை, கடந்த 50 நாள்களின் சராசரியைக் காட்டிலும் அதிகம். இச்சந்தையின் போக்கு மேலும் மேலே உயரும் என்கிறார் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் சுமித் பகாடியா.

 

SHARE MARKET SENSEX, NIFTY

 

நிப்டியில் குறியீடு இன்று (ஜூலை 8) 10850 & 10900 என்ற அளவில் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை, சந்தையில் சரிவு ஏற்பட்டால் 10570 புள்ளிகள் வரை வீழ்ச்சி காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய பங்குச்சந்தைகளும் நேற்று கணிசமாக ஏற்றத்துடன் வர்த்தகம் நடந்தது. அதனாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு உயர்வு கண்டன.

 

ஆதாயம் தரும் பங்குகள்:

 

சந்தைப் போக்கின் அடிப்படையில் பின்வரும் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ், என்பிசிசி (இண்டியா), ராஷ்டிரிய கெமிக்கல்ஸ், எம்டிஎன்எல், ரெயின் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், டின் பிளேட், ஜேகே டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ், ஸ்பிக், சிட்டி யூனியன் வங்கி, மங்களூர் கெமிக்கல்ஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், வோல்டாஸ், ஹேவல்ஸ் இண்டியா ஆகிய பங்குகளிள் முதலீடு செய்யலாம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

 

SHARE MARKET SENSEX, NIFTY

 

http://onelink.to/nknapp

 

ஆர்வம் உள்ள பங்குகள்:

 

எஸ்கார்ட்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், வைபவ் குளோபல், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், நவீன் புளூரைன் ஆகிய பங்குகள் எதிர்காலத்தில் அதிக ஆதாயம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது.

 

அதேநேரம், பிசி பவர் கண்ட்ரோல்ஸ், டச்வுட் என்டர்டெயின்மென்ட், மிட்டல் லைப் ஸ்டைல் மற்றும் ஓமாக்ஸ் ஆகிய பங்குகளை விற்று விடலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

 

இன்று முடிவு வெளியாகும் பங்குகள்:

 

சவுத் இந்தியன் வங்கி, ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்க்ஸ், டிஷ் டிவி இண்டியா, கொகுயா கேம்லின், புரோசன் இன்டூ பிராப்பர்டீஸ், மாதவ் காப்பரேஷன், ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்கின்றன. இதன் லாப-நட்டங்களைப் பொருத்து இப்பங்குகள் இன்று சந்தையில் முக்கியத்துவம் பெறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.