shakthikantha dass tests positive for corona

Advertisment

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், "தனக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.