ADVERTISEMENT

பொதுக்கழிவறையில் 8 வயது சிறுமி மீது பாலியல் அத்துமீறல் !! - 64 வயது முதியவர் கைது

10:37 AM Jun 19, 2018 | vasanthbalakrishnan

பொதுக்கழிவறையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக போலீசார் 65 வயதான நபரை கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கோல்ஸ்வாடியை ஒட்டியுள்ள கல்யாண் பகுதியை சேர்ந்த எட்டுவயது சிறுமி அங்குள்ள பொதுகழிவறைக்கு நேற்று மதியம் சென்றுள்ளார். அந்த சிறுமியை பின்தொடர்ந்து வந்த 64 வயதான கமுன்தாஸ் என்ற முதியவர் அந்த சிறுமியை பொதுக்கழிவறையிலேயே வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதைப்பற்றி சிறுமி வீட்டுக்கு வந்தவுடன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து. நேற்று இரவே அதே கோல்ஸ்வாடியில் சுஜாக் நாகா பகுதியில் 64 வயதான கமுன்தாஸ் கைது செய்ப்பட்டார்.

எட்டுவயது சிறுமி மீது பாலியல் அத்துமீறல் நடத்தியதற்காக அவன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போஸ்கோ) பிரிவின் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளியான கமுன்தாஸை இன்று நீதிமன்றத்தில் பொலிஸார் ஒப்படைக்க உள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT