ADVERTISEMENT

சீரம் நிறுவனத்தில் தீவிபத்து... 5 பேர் உயிரிழப்பு!

06:13 PM Jan 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனாவிற்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பூனேயில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் அலுவலகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்திய நிலையில், இறந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. முழுவதுமாக தீ அணைக்கப்பட்ட போதிலும் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா எனத் தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதியில் ஆய்வுசெய்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT