Skip to main content

யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை...டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

yasin

 

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்திய தண்டனை சட்டம் 124 ஏ (தேச விரோத செயல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யாசின் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்திருந்த நிலையில் அவருக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் எனத் தேசிய புலனாய்வு முகமை வலியுறுத்தியிருந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டவில்லையா? - ஆய்வு செய்ய பரிசீலனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Consideration to study whether Taj Mahal was built by Shahjahan or not

 

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இன்று இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

 

 

Next Story

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரை குற்றவாளி என கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

unnao case verdict by tiz hazari court

 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றபோது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தந்தை இறப்பிற்கு சாட்சியமாக இருந்த நபரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தாய் மற்றும் அத்தையின் பாதுகாப்பில் அப்பெண் வாழ்ந்து வந்த சூழலில், லாரி மோதி அப்பெண்ணின் தாயும், அத்தையும் சமீபத்தில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் பாலியல் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.


இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த டிஸ் ஹசாரி நீதிமன்றம், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்தது. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான சஷி சிங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.