Skip to main content

சரிவில் சென்செக்ஸ்; நிதானத்தில் நிப்டி! ஆனாலும் ஏற்றம் கண்ட 88 பங்குகள்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020


 

sensex, nifty wipro, axis bank, airtel shares


இந்தியாவும், சீனாவும் கால்வான் எல்லையில் படைகளைக் குவித்து வரும் பதற்றமான நிலையில், அதன் தாக்கம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் (ஜூன் 17) இந்தியப் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் துவக்கம் முதல் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் சீரற்று காணப்பட்டது. எனினும், சென்செக்ஸில் 88 பங்குகள் 52 வார உச்ச நிலையைத் தொட்டு வர்த்தகமானதால், முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நிப்டியில் முதல்நாள் சந்தை 9,914 புள்ளிகளுடன் முடிந்திருந்த நிலையில், புதன்கிழமை இண்டெக்ஸ் முந்தைய நாளைக் காட்டிலும் 38 புள்ளிகள் குறைந்து, 9,876.70 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. போர்ப் பதற்றம் ஒருபுறம் இருப்பினும், மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகள் வெளியானதால், முதலீட்டாளர்களிடம் ஆர்வம் ஸ்திரமாக இருந்தது. ஒருகட்டத்தில், நிப்டி 10,003.60 புள்ளிகள் வரை அதிகபட்சமாக உயர்ந்தது. குறைந்தபட்சமாக 9,833.80 புள்ளிகள் வரை லேசான சரிவைக் கண்டது. இறுதியில் 9,881.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இது, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 32.85 புள்ளிகள் மட்டுமே சரிவு ஆகும்.

 

ஏறிய பங்குகள்:
 

தேசிய பங்குச்சந்தையில் நேற்று (17/06/2020) வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,916 பங்குகளில் 1,012 பங்குகள் ஏற்றம் கண்டன. 835 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தக நடவடிக்கைகளைக் கணக்கிட உதவும் 50 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் சரிவிலும் இருந்தன.
 

sensex, nifty wipro, axis bank, airtel shares


நிப்டியில், அதிகபட்சமாக மாருதி பங்குகள் 4.05 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. அதற்கு அடுத்து, பார்தி ஏர்டெல் (3.41%), விப்ரோ (2.45%), பிரிட்டானியா (1.98%), ஆக்சிஸ் வங்கி (1.85%) ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபம் கொடுத்தன. அதேநேரம், இன்ப்ராடெல் (4.49%), கோடக் வங்கி (2.28%), ஐடிசி (2.19%),  பவர் கிரிட் (2.15%), மஹிந்திரா அண்டு மஹிந்திரா (1.85%) பங்குகள் எதிர்மறை வளர்ச்சியில் இருந்தன.

 

சரிவில் சென்செக்ஸ்:
 

சென்செக்ஸ் முந்தைய நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில், புதன்கிழமை காலையில் 177 புள்ளிகள் குறைந்து, 33,438.31 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. 10.30 மணி முதல் 12.10 மணி வரை 33,660 புள்ளிகளுடன் பெரிய அளவில் மாற்றமின்றி வர்த்தகம் லேசாக ஸ்தம்பித்தது. அதன் பின்னரும் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்த சென்செக்ஸ், நேற்றைய வர்த்தக நேர இறுதியில் 33,507.92 புள்ளிகளுடன் முடிவடைந்தது. அதிகபட்சமாக 33,933 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 33,332 புள்ளிகளுக்கும் சென்றது.

 

சென்செக்ஸில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆகின. அதேநேரம், பி.எஸ்.இ .சந்தையில் பதிவு செய்துள்ள 2,720 நிறுவனங்களில் 1,410 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளித்தன. 1,154 பங்குகளின் விலைகள் லேசாகச் சரிந்தன. 156 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. 
 

sensex, nifty wipro, axis bank, airtel shares


அதேநேரம், 88 பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது, முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 48 பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையை பதிவு செய்தது. 

 

சென்செக்ஸில் ஜி.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 19.99 சதவீதம் ஆதாயம் அளித்தன. ஓரியண்ட் சிமெண்ட் 13.90 சதவீதம், கோரமண்டல் 6.62 சதவீதம், பிர்லா கார்ப்பரேஷன் 9.99 சதவீதம், சோழா பைனான்ஸ் 8.30 சதவீதம் மற்றும் ஐடிஐ பங்குகள் 10.65 சதவீதம் வரை லாபம் அளித்தன. 

 

விலையேறும் என எதிர்பார்க்கப்பட்ட வக்ராஞ்சி பங்குகள் 4.91 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மஹாராஷ்டிரா வங்கி, சுஸ்லான், கேபிஆர் மில், ஆயில் ஆகிய பங்குகளின் மதிப்பும் 4.50 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
 

sensex, nifty wipro, axis bank, airtel shares


உலகச்சந்தைகள் நிலவரம்:
 

http://onelink.to/nknapp


லண்டன் பங்குச்சந்தையான எப்.டி.எஸ்.இ. 0.75 சதவீதம், பிரான்ஸ் நாட்டின் சிஏசி 1.42 சதவீதம், ஜெர்மனியின் டி.ஏ.எக்ஸ். 0.83 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தன. ஆசியாவின் நிக்கி சந்தையைத் தவிர, மற்ற சந்தைகள் ஏற்றம் கண்டிருந்ததால், இந்தியாவில் பதற்றமான சூழ்நிலையிலும் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகளில் அபாயகரமான வீழ்ச்சி ஏதும் ஏற்படவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.