/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DkyN86jUwAEFae2.jpg)
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் தற்போது டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீதாராம் எச்சூரியும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தியப்பின் அவர் வாஜ்பாய் பற்றி கூறியதாவது"அரசியலுக்காகவும், கொள்கை வேறுபாட்டுக்காகவும் மனிதாபிமானத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல அடல், அதுதான் அவருடைய சிறப்பும் கூட. அவரை மாதிரியான ஒரு கொள்கை இந்த நாட்டில் பலருக்கு தேவைப்படுகிறது"என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)