'அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணத்தை வைத்து ஆளுங்கட்சியானது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்வதற்கு இது வித்திடுவதாக அமையும். அதற்காகத்தான் உச்சநீதிமன்றம் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நன்கொடை என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதை வரவேற்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.