Skip to main content

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழு சந்தை அங்கீகாரம் - நிபுணர் குழு பரிந்துரை

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

vaccine

 

சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் கடந்தாண்டு தொடக்கத்தில் அவசரகால அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் கேட்டு அத்தடுப்பூசிகளைத் தயாரித்திருந்த நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்தநிலையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு,  கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கப்பட்டால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழக்கமான சந்தையில் விற்பனை செய்யலாம். பொதுவாக இரண்டு கட்ட ஆய்வக பரிசோதனை தரவுகள் ஆராயப்பட்டு, தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளைவிட பயன்கள் அதிகம் என உறுதியான பின்னர் தடுப்பூசிகளுக்கு அவசர கால அங்கீகாரம் வழங்கப்படும்.

 

அதேநேரத்தில் தடுப்பூசிக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன்னர், அதன் மூன்று கட்ட ஆய்வகப் பரிசோதனை தரவுகளும் ஆராயப்படும். மேலும் குறிப்பிட்ட தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மக்களில் பெரும்பாலோனோருக்கு அத்தடுப்பூசி பாதுகாப்பனதாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததா என்பது உறுதி செய்யப்படும். அதன் பின்னரே முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.