Skip to main content

பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை கட்டுப்பாடு !! சர்ச்சையை கிளப்பிய புனே பள்ளி!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

pune

 

 

 

புனேவில் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை விவகாரத்தில் கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி நிர்வாகம் தற்போது கட்டுப்பாடுளை வாபஸ் பெற்றுள்ளது. 

 

புனேவின் பிரபல பள்ளியான maeer யில் மாணவிகளுக்கான வழிகாட்டு உரையில் சர்ச்சைமிகுந்த உத்தரவுகள் இருப்பதால் மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குழப்பம் அடைந்துவந்தனர்.

 

அதவாது மாணவியர்களின் பாதுகாப்பிற்காக வெள்ளை நிற உள்ளாடை மற்றும் தோல்நிற உள்ளாடையை அணிய வேண்டும் என்ற கட்டளையால்தான் அந்த குழப்பமே. மேலும் அதில் மாணவிகளுக்கான ஸ்கர்ட் எத்தனை மீட்டர் நீளம் இருக்க வேண்டும் என்பது முதல்கொண்டு குறிப்பிட்டுள்ளனர். இதை பள்ளி டயரியில் குறிப்பிட்டு, பெற்றோர்களின் கையெழுத்து கட்டாயமாக பெற்று வர வேண்டும். அப்படி பெறவில்லை என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பள்ளி வழிகாட்டு உரையில் குறிப்பிட்ட நேரத்தை மீறி மாணவியர்கள் ஒப்பனை அறையை பயன்படுத்தினாலும் தண்டனைகள் வழங்கப்படும் என்கின்றனர்.

 

 

 

இப்பள்ளி நிர்வாகத்தின் செயல் இயக்குனர் சுசித்ரா கரத் நகரே இதனை பற்றி தெரிவிக்கையில்," இதன் நோக்கம் சுத்தமானதே. இது மாணவியரின் பாதுகாப்பிற்காகவே இந்த விதிகள் எல்லாம். இந்த விதியில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னை அணுகலாம், அதனை வைத்து தீர்வு கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் புதன்கிழமை அன்று இதனை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை குறித்து பள்ளி இயக்குனரிடம் புகார் அளித்தனர். 

 

இதுகுறித்து மஹாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் டாவடே தெரிவிக்கையில்," இந்த பிரச்சனையை பற்றி விசாரணை நடத்த கல்வித்துறைக்கு தெரிவித்துள்ளேன். தேவைப்பட்டால் அவர்களின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார் இந்த நிலையில் தற்போது பள்ளியின் இந்த சர்ச்சையை கிளம்பிய கட்டுப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.