Skip to main content

சேர்மன் பதவி வாங்கித் தருவதாக மோசடி- பாஜக பிரமுகரிடம் 26 லட்சம் சுருட்டல்!

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Scam to buy the post of chairman - 26 lakhs from a BJP figure!

 

புதுச்சேரி அடுத்த கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்தவர் சீனிவாச பெருமாள். மிஷின் வீதியில் துணிக் கடை நடத்தி வருகிறார். இவர் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியில் வணிக பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவரது கடைக்கு சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரேமவதி, செந்தில் ஆகியோர் வந்தனர். அப்போது சீனிவாச பெருமாளிடம் பேச்சு கொடுத்த இருவரும், டெல்லியில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதிகாரிகள் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளனர். நாங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தங்களை பெரிய ஆள் போன்று காட்டி கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் சீனிவாச பெருமாள் தொடர்பிலிருந்து வந்தார். ஒருநாள் அவருக்கு போன் செய்த பிரேமவதி, ' நாங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்துள்ளோம். முக்கியமான விஷயம் பேச வேண்டும்' என்று அழைத்தனர். இதை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு சீனிவாச பெருமாள் சென்றார்.

 

அப்போது தங்கள் நண்பர்கள் என்று கணேசமூர்த்தி, சௌந்தர், பிரேம் ஆகியோரை சீனிவாச பெருமாளுக்கு பிரேமவதி அறிமுகம் செய்து வைத்தார். ' புதுச்சேரி அரசுக்கு வருமானம் அதிகம் கொடுப்பது கலால்துறை. இந்த கலால் துறைக்கு சேர்மன் பதவி இருக்கிறது. இதற்கு மதிப்பு அதிகம். இதை வாங்க பலரும் கையில் பணம் வைத்து கொண்டு வரிசையில் நிற்பதாகவும், பழகிய நபர் என்பதால் உங்களுக்கு அந்த பதவியை வாங்கி கொடுக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தொடர்பாக டெல்லி அதிகாரிகளிடம் பேசி ஒப்புதல் வாங்கி விட்டோம். இந்த சேர்மன் பதவி உங்களுக்கு வந்து விட்டால், வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம்' என்று ஆசை வார்த்தை கூறினார்.

 

Scam to buy the post of chairman - 26 lakhs from a BJP figure!

 

இதில் மயங்கிய போன சீனிவாச பெருமாள், கலால்துறை சேர்மன் கனவில் மிதக்க ஆரம்பித்தார். இதற்காக ரூ. 26 லட்சம் பணம் கேட்டது சென்னை கும்பல். இதற்கு சம்மதம் தெரிவித்த சீனிவாசபெருமாள், வங்கி கணக்கு மூலம் செந்திலுக்கு ரூ 15 லட்சம் அனுப்பி வைத்தார். மேலும் பிரேமவதி கையில் ரூ 11 லட்சம் பணத்தை கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், இன்னும் ஒரு வாரத்தில் ஆர்டர் காப்பி வந்து விடும். அதன் பிறகு நீங்கள் பதவி ஏற்று கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்னை சென்றது. ஒரு வாரத்திற்கு பிறகு எந்த வித ஆர்டரும் வரவில்லை. இதையடுத்து பிரேமவதியை தொடர்பு கொண்டு கேட்ட போது சரியான பதில் கூறவில்லை. பின்பு சென்னை சென்று தேடிய போது அவர்கள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாச பெருமாள், சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் சென்னையைச் சேர்ந்த பிரேமவதி, செந்தில், கணேசமூர்த்தி, சௌந்தர், பிரேம் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.