ADVERTISEMENT

இரண்டாவது முறையாக வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ. வங்கி!

06:25 PM May 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி, கடந்த மே 4- ஆம் தேதி அன்று உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி. கடன் வட்டியை 0.1% அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு ஏற்கனவே, அந்த வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக வாங்க உள்ளவர்களுக்கும் பொருந்தும். கடந்த மாதம் தான் பாரத் ஸ்டேட் வங்கி 0.1% வட்டியை உயர்த்தியிருந்த நிலையில், இரண்டாவது மாதமாக மீண்டும் வட்டி உயர்வை அந்த வங்கி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT