Skip to main content

சசிகலா டிஸ்சார்ஜ்... தங்குவதற்கு மூன்று இடங்கள் தேர்வு?

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

 Sasikala Discharge ... Three places to stay?

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்.

 

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை வளாகத்தின் வாயிலில் அவரது ஆதரவாளர்கள், அமமுகவினர் அதிகளவில் குவிந்துள்ளனர். பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடிய சசிகலா மருத்துவர்களின் ஆலோசனைப்படி பெங்களூரிலேயே 10 நாட்கள் வரை ஓய்வெடுக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அவர் தங்குவதற்காக ஜெய் நகர், ராஜாஜி நகர்,  ஆனேக்கால் உள்ளிட்ட மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று இடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் அவர் தங்குவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேறு ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவ கண்காணிப்பில் தங்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இன்று காலை முதற்கொண்டே கர்நாடக போலீசார் மருத்துவமனை முன்பாக தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா அரசு மருத்துவமனையில் உள்ள எட்டு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.

 

சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. 7 நாட்களிலிருந்து 10 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். கர்நாடகாவில் பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. தமிழகத்தில் எவ்வாறு உள்ளது என்பது தெரியவில்லை'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.