Advertisment

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ - ஒரு வருடமாக இளைஞரை துரத்தும் வினோதப் பறவை 

 sarus crane follows its rescuer for a year

தன்னை காப்பாற்றியவரை ஒரு வருடமாக பின்தொடரும் ஸாரஸ் கேன் பறவையின் வீடியோதற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

Advertisment

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்துக்கு அருகே உள்ளது அவுரங்காபாத் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஆரிஃப். 30 வயதான இவர், மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். தனக்கு அழைப்பு வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்றுதன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்முஹம்மது ஆரிஃப். இவர்தன்னுடைய பைக்கில் நாள்தோறும் 40, 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில்கௌரிகஞ்ச் பகுதியில் அவர்சென்றுகொண்டிருந்தபோதுஒரு வயல் வெளியில் ஸாரஸ் கேன் வகையைச் சார்ந்த பறவை ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்த ஆரிஃப், அந்தப் பறவையை விட்டுச் செல்ல மனமில்லாமல்தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisment

அதன்பிறகு, பறவையின்உடைந்த கால்களுக்கு மருந்து போட்டுவிட்டுமூங்கில் குச்சிகளைக்கொண்டு காலில் கட்டு போட்டுசிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பறவை குணமாவதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதால்அதற்காகவே தனியாக கூரையில் ஷெட் அமைத்துஅதில் அந்தப் பறவையை பாதுகாத்து வந்துள்ளார். அதன்பிறகு, ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்த பிறகுமுஹம்மது ஆரிஃப் எங்கு சென்றாலும் பின்னாலேயேவந்துவிடும். மேலும், அவரைத்தவிர வேறு யாராவது உணவு கொடுத்தால்அவர்களை தாக்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்ததால் அதைக் கொண்டுபோய்காட்டுக்குள் விட்டுள்ளார். ஆனால், காட்டுக்குள் செல்வதை விரும்பாத அந்தப் பறவை, ஆரிஃப் பைக்கிற்கு பின்னாலேயேஅவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒரு நிமிடம் கூட ஆரிஃப்பை விட்டுப் பிரியாமல்எப்போதும் அவரையே சுற்றி வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிதற்போது சோசியல்மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

- சிவாஜி

birds uttrapradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe