Skip to main content

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ - ஒரு வருடமாக இளைஞரை துரத்தும் வினோதப் பறவை 

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 sarus crane follows its rescuer for a year

 

தன்னை காப்பாற்றியவரை ஒரு வருடமாக பின்தொடரும் ஸாரஸ் கேன் பறவையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்துக்கு அருகே உள்ளது அவுரங்காபாத் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஆரிஃப். 30 வயதான இவர், மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். தனக்கு அழைப்பு வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் முஹம்மது ஆரிஃப். இவர் தன்னுடைய பைக்கில் நாள்தோறும் 40, 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கௌரிகஞ்ச் பகுதியில் அவர் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வயல் வெளியில் ஸாரஸ் கேன் வகையைச் சார்ந்த பறவை ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்த ஆரிஃப், அந்தப் பறவையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

 

அதன்பிறகு, பறவையின் உடைந்த கால்களுக்கு மருந்து போட்டுவிட்டு மூங்கில் குச்சிகளைக் கொண்டு காலில் கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பறவை குணமாவதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதால் அதற்காகவே தனியாக கூரையில் ஷெட் அமைத்து அதில் அந்தப் பறவையை பாதுகாத்து வந்துள்ளார். அதன்பிறகு, ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்த பிறகு முஹம்மது ஆரிஃப் எங்கு சென்றாலும் பின்னாலேயே வந்துவிடும். மேலும், அவரைத் தவிர வேறு யாராவது உணவு கொடுத்தால் அவர்களை தாக்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்ததால் அதைக் கொண்டுபோய் காட்டுக்குள் விட்டுள்ளார். ஆனால், காட்டுக்குள் செல்வதை விரும்பாத அந்தப் பறவை, ஆரிஃப் பைக்கிற்கு பின்னாலேயே அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒரு நிமிடம் கூட ஆரிஃப்பை விட்டுப் பிரியாமல் எப்போதும் அவரையே சுற்றி வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.