ADVERTISEMENT
இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
ADVERTISEMENT
இந்த நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி செலுத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments