Skip to main content

பிஎம் கேர்ஸ் நிதி எதற்கு இருக்கிறது? நாடாளுமன்றத்தில் சீரிய சஞ்சய் ராவத்...

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

sanjay raut questions use of pm care

 

 

பி.எம். கேர்ஸ் நிதி குறித்து சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

 

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் மாநிலங்களவையும், மதியம் மக்களவையும் கூடி கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், கரோனா தடுப்பு மற்றும் பி.எம் கேர்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அவரது அந்த உரையில், "என்னுடைய தாயும், என் தம்பியும் கரோனா பாதித்து ஐசியுவில் இருக்கிறார்கள். எனவே கரோனாவின் பயங்கரம் என்னவென்று என் அனுபவம் எனக்கு கற்று தந்துள்ளது.

 

பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே அன்று கேள்வி எழுப்பினார். மகாராஷ்ட்ரா அரசு கோவிட்-19-ஐ கையாளுவது பற்றி விமர்சித்தார். ஆனால் நெருக்கடியான பகுதியான தாராவி உட்பட பலபகுதிகளில் கரோனா பரவல் அபாயத்தை தடுத்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி வகுத்த விதிமுறைகளை மகாராஷ்ட்ரா அரசு கடைப்பிடித்து வருகிறது.

 

பிபிஇ கவச உடைகள், உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற கரோனா தடுப்பு உத்திகளுக்கான நிதியை மகாராஷ்ட்ராவுக்கு வழங்குவதை மத்திய அரசு செப்.1 முதல் நிறுத்தியது. இதனால் மகாராஷ்ட்ர அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.50 கோடி செலவாகிறது. மாநிலங்களுக்கு உதவுவதற்கு இல்லாமல் வேறு எதற்காக பிஎம் கேர்ஸ்?" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகாராஷ்டிராவில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
In Maharashtra India alliance seat distribution completed

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Manohar Joshi passed away

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.

மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.