சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யும் ஆன சஞ்சய் ராவத் நெஞ்சுவலி காரணமாக இன்று மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியமைப்பதற்காக தொடர் பணிகளில் சஞ்சய் ராவத் ஈடுபட்டு வந்தார். சில நாட்களாக அவருக்கு நெஞ்சு வலி இருந்து வந்த நிலையில் இன்று அதன் பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் மருந்துவர்கள் அவரை ஓய்வு எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். அவருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று விக்ரோலி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் தெரிவித்து உள்ளார்.
Show comments