Skip to main content

"இலங்கை தமிழர்களுக்காக எதுவும் இல்லை" சஞ்சய் ராவத் பரபரப்பு கருத்து...

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

 

sanjay raut about citizenship amendment bill

 

 

சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த சிவசேனா, மாநிலங்களவையில் ஆதரவு தெரிவிக்க சில நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதுகுறித்து பேசிய சிவசேனா மூத்த தலைவர், இந்த மசோதாவில் இலங்கையின் தமிழ் இந்துக்களுக்கான இந்த மசோதாவில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், "இந்த மசோதா மீதான எங்கள் சந்தேகங்களை பாஜக தீர்க்க வேண்டும். எங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை என்றால், எங்கள் நிலைப்பாடு மக்களவையில் நாங்கள் எடுத்ததைவிட வித்தியாசமாக இருக்கும். வாக்கு அரசியலுக்காக பாஜக இதனை செய்யக்கூடாது. அது சரியானதல்ல. மீண்டும் ஒரு இந்து-முஸ்லீம் பிளவை உருவாக்க முயற்சிக்காதீர்கள். இலங்கையின் தமிழ் இந்துக்களுக்காக கூட இந்த மசோதாவில் எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார். மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவு தெரிந்திருந்த சிவசேனாவின் இந்த பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மகாராஷ்டிராவில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
In Maharashtra India alliance seat distribution completed

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Manohar Joshi passed away

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.

மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.