
அண்மைக்காலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகளும், சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்கூட வேலூரிலும், திருப்பூரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தது. அதிலும் வேலூரில் நடந்த சம்பவத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை இந்திய சந்தையில் சரிவு கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒகினவா, ஓலா நிறுவனங்களின் எலக்ட்ரிக் பைக்குகள் சாலையிலேயே தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் எலக்ட்ரிக் பைக் வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஒகினவா பேட்டரியில் கோளாறு உள்ளதாக 3,215 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் திடீரென சாலையில் தீப்பற்றிய சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)