Skip to main content

699 கோடி வரி கட்டிய இந்திய தொழிலதிபர்...

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

fthj

 

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் ஒன்றான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீதப் பங்குகளை  சச்சின் பன்சால் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்றார். இதன் மூலம் கிடைத்த வருமானத்திற்காக சச்சின் பன்சால் 699 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள பிளிப்கார்ட்டின் 77 சதவீதப் பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது. எனவே சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. இந்தநிலையில் வால்மார்ட்டுடனான ஒப்பந்தத்துக்காக சச்சின் பன்சால் 699 கோடி ரூபாயை முன்கூட்டியே வருமான வரியாகச் செலுத்தியுள்ளார். எனினும் பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை குறித்து சச்சின் பன்சால் தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் இதுபற்றி எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

A shock awaits the person who ordered the drone camera!

 

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் 80,000 ரூபாய் கொடுத்து ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் 100 ரூபாய் பொம்மை கார் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 

திருவள்ளூர் மாவட்டம், சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மொய்தீன் அவரது நண்பர் சுரேஷ் என்பவருக்காக ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக கிரெடிட் கார்டு மூலமாக 79,064 ரூபாயைச் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். 

 

கேமரா பார்சல் இன்று (26/09/2022) வந்த நிலையில், அது தக்கையாக இருந்ததால் சந்தேகமடைந்த இருவரும் பார்சலைப் பிரிக்கும் போது வீடியோ எடுத்துள்ளனர். அப்போது பார்சலில் ட்ரோன் கேமராவுக்கு பதில் பொம்மை கார் இருந்துள்ளது. 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரைத் தொடர்புக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் செல்போனை எடுக்காத நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர். 

 

Next Story

ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு, நிர்மா சோப்புகளை அனுப்பிய பிரபல ஆன்லைன் நிறுவனம்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

For those who order iPhone, the famous online company that sent soaps

 

"வாஷிங் பவுடர் நிர்மா.. வாஷிங் பவுடர் நிர்மா.. நிர்மா.. எனும் விளம்பரப் பாடலைக் கேட்டால் இப்போதும் நம்மில் பலருக்கும் இளமைக்கால நினைவுகள் கண் முன்னே வந்துபோகும். ஆனால், இந்த 'நிர்மா' ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்களை முன்னிட்டு பல நிறுவனங்களும் தங்களது பொருட்களை 'சிறப்புத் தள்ளுபடியில்' விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. இந்த விழாக்கால சிறப்புத் தள்ளுபடிக்கு 'ஃப்ளிப்கார்ட்', 'அமேசான்', போன்ற பெருநிறுவனங்களும் விதிவிலக்கல்ல. தீபாவளியை முன்னிட்டு மிகக் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக, பல நூறு விளம்பரங்கள் நமது நோட்டிஃபிகேஷனை நிரப்புகின்றன. அந்தவகையில், ப்ளிப்கார்ட் நிறுவனம், 'பிக் பில்லியன் சேல்ஸ்' எனும் ஆஃபரின் கீழ் பிராண்டட் பொருட்களை, குறைந்த விலையில், குறுகிய காலத்திற்குள் விற்பனை செய்து வந்தது.

 

இதைப் பார்த்ததும், குறைந்த விலையில் ஆப்பிள் ஐஃபோன் வாங்க நினைத்துள்ளார் வாடிக்கையாளரான சிம்ரன்பால் சிங். ஆப்பிள் ஐஃபோன் 12-ஐ, ரூபாய் 51,999-க்கு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார் சிம்ரன்பால். கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ஐஃபோன் வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஊழியர் அவரை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது, 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' முறையின் கீழ், ஃப்ளிப்கார்ட் ஊழியர் முன்னிலையிலேயே திறந்துள்ளார். அத்துடன், அதை வீடியோவாகப் பதிவும் செய்துள்ளார். ஐஃபோன் கனவுடன் பாக்சை திறந்து பார்த்தபோது, ஐந்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிர்மா சோப்புகள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிம்ரன்பால், ஃப்ளிப்கார்ட் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஊழியரோ, உங்கள் OTP சொல்லுங்க எனக் கூறியுள்ளார்.

 

For those who order iPhone, the famous online company that sent soaps

 

இதனால், மேலும் கடுப்பான சிம்ரன்பால், 'ஐஃபோன் ஆர்டர் பண்ண எனக்கு சோப்புக் கட்டி வந்துருக்குனு சொல்றேன் நீங்க OTP கேட்டுட்டு இருக்கீங்க' என ஆவேசமாகப் பேசியுள்ளார். ஆனாலும், அந்த ஊழியர் OTP எண்ணை வாங்கிவிடுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.இதனால் சந்தேகமடைந்த சிம்ரன்பால், உடனே ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கியுள்ளார். ஃபிளிப்கார்ட் தரப்பில் கவலைப்படத் தேவையில்லை, உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் உங்களது ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, உங்களது பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டுக்கே வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். ஆனாலும், தொடர் அலைக்கழிப்புக்குப் பிறகு, சுமார் 5 நாட்கள் கழித்தே பணம் சிம்ரன்பாலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.

 

இதுகுறித்து சிம்ரன்பால் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆர்டர் செய்யும் அனைவரும் 'ஓபன் பாக்ஸ் டெலிவரி' முறையைப் பயன்படுத்துங்கள். என்னைப் போலவே எல்லாருக்கும் போன பணம் திரும்ப கிடைத்துவிடாது. ஆகையால் விழிப்புணர்வுடன் ஆர்டர் செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே பல தளங்களில் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் போன்ற ஒரு நம்பிக்கையான பெரிய நிறுவனத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பலரது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.