walks outs

Advertisment

சபாிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்படும் என்றகேரளா அரசின் நிலைப்பாட்டை கண்டித்து ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் பா.ஜ.க வெளியேறியதால் சபாிமலை விவாகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

மண்டல மகர பூஜைக்காக சபாிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுதினத்தில் இருந்து பக்தா்கள் சபாிமலையில் அனுமதிக்க பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பின் படி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளாைஅரசின் நிலைப்பாடு குறித்து இன்று முதல்வா் பினராய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் தேவசம் போா்டு மந்திாி கடகம் பள்ளி சுரேந்திரன், எதிா்கட்சி தலைவா் (காங்கிரஸ்) ரமேஷ் சென்னிதல, காங்கிரஸ் மாநிலதலைவா் முல்லம்பள்ளி ராமசந்திரன், பா.ஜ.க மாநில தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisment

இதில் உச்சநீதிமன்றம் உத்தரவை கேரளா அரசு அமல் படுத்த உள்ளது என்றும் மேலும் சபாிமலைக்கு வர விரும்பும் அனைத்து வயது பெண்களுக்கும் முறையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க தயாராக இருக்கிறது என்றும் இதே போல் பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலிசாரும் சபாிமலையில் பணி அமா்த்த பட இருப்பதாவும் பினராய் விஜயன் கூறினாா்.

இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக உச்சநீதி மன்றம் மறுசீராய்வு மனு மீதான விசாரணையை ஜனவாி 22-ம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதால் இந்த மண்டல காலத்தில் குறிப்பிட்ட வயது உடைய அந்த பெண்களை அனுமதிக்க கூடாது என்றும் சீராய்வு மனு மீதான தீா்ப்புக்கு பிறகு அரசு அடுத்த நடவடிக்கை எடுக்க வேணடும் என்று கூறினாா்கள்.

இதற்கு பினராய் விஜயன் முடியாது என்றும் அல்லது பெண்கள் ஓரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் செல்லும் வகையில் அதை உறுதி படுத்துவோம் என்றாா். அரசு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ், பாஜக கூறியது. ஒருமதத்தின் ஆச்சாரங்களிலும் விசுவாசத்திலும் தலையிடுவதற்கு அரசுக்கு உாிமையில்லை என்று கூறி அரசின் நிலைபாட்டிற்கு எதிா்ப்பு தொிவித்து காங்கிரசும் பாஜகவும் கூட்டத்தில் இருந்து வெளியேறியது.

Advertisment

இதனால் கூட்டம் பாதியிலேயே நின்றது. இந்த நிலையில் சபாிமலை விவகாரம் மீண்டும் ஓரு பதட்டத்தை தொற்றி கொண்டிருக்கிறது.