Skip to main content

ஆணுறுப்பை அறுத்துகொண்ட 28 வயது சாமியார்.... குற்றம் சாட்டியவர்கள் அதிர்ச்சி....

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

 

baba


பெண்ணின் மீது மோகம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ஒருவர், தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டுள்ளார்.
 

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த மாதனி பாபா என்ற சாமியார் ஒருவர் உள்ளார். 28வயது நிறம்பிய இவர், தனது வாழ்க்கையை திறந்து சாதுவாக மாறியுள்ளார். பின்னர், ஆசிரமங்கள், தனக்கென பக்தர்கள் என்று வாழ்ந்து வந்துள்ளார். இவர் தற்போது ஒரு ஆசிரமத்தை கட்ட இருக்கிறார். இதை எதிர்க்கும் கும்பல், இந்த சாமியார் மீது பாலியல் புகார் சுமத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த புகாரை அடுத்து, தன்னுடைய ஆணுறுப்பையே அறுத்துக் கொண்டுள்ளார் மாதனி பாபா. இந்த சாது இவ்வறு செய்துகொண்டதால் குற்றம்சாட்டியவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 

இந்நிலையில், பம்னா மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகாரில் சாமியார் சத்திய நாராயணன் கைது!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

Samiyar Satyanarayanan arrested chennai police

 

இளம் பெண்ணுக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சாமியார் போக்சோ சட்டத்தின் கீழ் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

சென்னையைச் சேர்ந்த சாமியார் சத்திய நாராயணன், கொளத்தூரில் சிறிய அளவில் தியான பீடம் அமைத்து, தியானம், ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்துள்ளார். நாளடைவில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தியான பீட இடத்தையும் அவர் விரிவுப்படுத்தினார். அப்பகுதியில் பிரபல சாமியாராக விளங்கிய சத்திய நாராயணன், தற்போது ஒரு பெண் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார். 

 

தான் 11- ஆம் வகுப்பு படிக்கும்போது பாட்டியுடன் சாமியார் சத்திய நாராயணனின் தியான பீடத்திற்கு சென்றதாகவும், அச்சமயம் சாமியார் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் 22 வயது நிரம்பிய அந்த பெண் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

 

தியான பீடத்தில் மயக்க நிலையில் இருந்து எழுந்த என்னிடம் கெட்ட ஆவியை வெளியேற்றியதாக சாமியார் கூறினார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். திருமணமான பின்னர் எதேச்சையாக சாமியார் சத்திய நாராயணனைச் சந்தித்த தருணத்தில், தன்னை ஆபாசமாக படமெடுத்து வைத்துள்ளதாகவும், அவரது விருப்பத்துக்கு இணங்கவில்லையெனில், கணவரிடம் காட்டி விடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். இதனால் தான் கர்ப்பமடைந்ததாகவும், அந்த பெண் கூறியுள்ளார். 

 

தற்போது மீண்டும் மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுப்பதாக, காவல் ஆணையரிடம் அந்த பெண் புகார் அளித்ததையடுத்து, விசாரணையில் இறங்கியது காவல்துறை. அதன் அடிப்படையில் சாமியார் சத்திய நாராயணனையும், உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

பாலியல் வன்கொடுமை, மிரட்டல், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

 

Next Story

பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கி பேயோட்டிய 'பிராந்தி சாமியார்' கைது!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 

நாமக்கல் அருகே, பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாட்டையாலும் பிரம்பாலும் கொடூரமாகத் தாக்கி பேயோட்டிய பிராந்தி சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காதப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). கடந்த சில ஆண்டுகளாக, மஞ்சநாய்க்கணூரில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி வந்தார்.

 

உடல்நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மகன், மகள் திருமணத்தடை அகல வேண்டுவோர் என அவரிடம் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டு வந்தனர். குறிப்பாக, பேய் பிடித்ததாகக் கருதப்படும் பெண்களுக்குப் பேய் ஓட்டும் பணிகளையும் செய்து வந்தார். 

 

தனக்குள் கருப்பண்ண சாமி இறங்கியிருப்பதாகவும், தான் ஒரு சிவ பக்தன் என்றும் சொல்லிவந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, முகத்திலும் உடலிலும் திருநீறு, திரிசடை, இடுப்பில் கொத்தாக கட்டப்பட்ட சலங்கைகள், கருப்பு நிறத்தில் அரைக்கால் டிரவுசர் என சாமியார் போல இருந்ததாலும், அவர் கூறிய சில அருள்வாக்குகள் பலித்ததாலும் படித்தவர்கள் கூட அவரிடம் அருள்வாக்கு கேட்டு வந்தனர். 

 

பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களின் உடலில் இருந்து பேயை விரட்டி அடிக்கிறேன் பேர்வழி என்று, எதிரில் வந்து அமரும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முதுகில் கையால் குத்துவதும், சாட்டையால் சரமாரியாக அடிப்பதும், கன்னத்தில் பளீச் பளீச் என அடிப்பதும், குனிய வைத்து காலால் உதைப்பது என கொடூரமான முறைகளைக் கையாண்டு வந்தார். சாட்டை மட்டுமின்றி நீளமான மூங்கில் பிரம்பாலும் பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களைத் தாக்கி வந்துள்ளார். 

 

'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 

தன் களைப்பு தீர, அடிக்கடி பிராந்தி குடித்துக்கொள்கிறார். பிராந்தியை ஒரு டம்ளரில் ஊற்றிக்கொடுப்பதற்காகவே உதவியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். 

 

அவர் பேய் ஓட்டும் காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வேகமாகப் பகிரப்பட்டுவந்தது. அவர் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும், மூடநம்பிக்கை என்றும் விவாதங்களும் கண்டனங்களும் எழுந்தன. 

 

இதையடுத்து, பொம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் சாமியார் மீது புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன், பேயோட்டி அனில்குமாரை வியாழக்கிழமை (மே 6) நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். அப்போது நடந்த விசாரணையில், தற்போது வாட்ஸ்ஆப்களில் பகிரப்பட்டு வரும் பேயோட்டும் சம்பவம், மூன்று மாதத்திற்கு முன்பு நடந்தது என்று அனில்குமார் கூறியுள்ளார். 

 

எனினும், அருள்வாக்கு, பேயோட்டுதல் என்ற பெயரில் பெண்களைக் கொடூரமாக தாக்குவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் பேயோட்டி அனில்குமாரை வெள்ளிக்கிழமை (மே 7) கைது செய்தனர். 

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''சாமியார் அனில்குமார் பேயோட்டியதாக வாட்ஸ்ஆப்களில் வரும் சம்பவத்தில் தொடர்புடைய பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தற்போது, பெண்களைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில்தான் அனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என்றனர்.